இலங்கைப் பெண்களுக்கு ஆபத்து! விடுக்கப்படும் எச்சரிக்கை!!

இலங்கைப் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்த் தாக்கம் அதிரித்து வருவாதாக புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வருடந்தோறும் 3000 தொடக்கம் 3500 வரையிலான மார்பகப் புற்றுநோயாளர்கள் கண்டறியப்படுவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 25 வருடங்களாக இந் நோய்த் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அண்மைய தரவுகளின் அடிப்படையில் மார்பகப் புற்றுநோய் இலங்கைப் பெண்கள் மத்தியில் சாதாரணமாகி விட்டது என்று தெரிவிக்கும் நிபுணர்கள்,

தைரோய்ட் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் இரண்டாம் இடத்தில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் நான்கில் ஒருவர் மார்பகப் புற்றுநோயாலேயே பாதிக்கப்படுகின்றனார்.

இந் நோயினைக் கண்டறியும் நிலைமையைப் பொறுத்தே அவர்களுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற முடியும் என்று தெரிவித்திருக்கும் நிபுணர்கள்,

துரதிஷ்டவசமாக 60 வீதத்திற்கும் அதிகமானவர்கள் ஆபத்தான கட்டத்திலேயே மருத்துவ சிகிச்சைக்காக வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் ஆசியப் பெண்கள் 30 வயது தொடக்கம் 35 வயதுக்குட்பட்டவர்களே இந் நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post