ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு புதிய தலைவர் நியமிப்பு!

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அமெரிக்கப் படைகளின் தாக்குதலின் போது தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த அமைப்புக்கு புதிய தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கடந்த சனிக்கிழமை சிரியாவில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட தாக்குதலில் பலியாகியிருந்தார்.

இந் நிலையில் ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசைனின் இராணுவத்தில் அதிகாரியாகக் கடமையாற்றிய அப்ல்லா குர்டேஷ் என்பவர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நபர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் முஸ்லிம் விவகாரங்களைக் கையாண்ட நபர் எனவும் அப்துல்லா கர்ஷேஸ் என்ற பெயரிலும் அழைக்கப்படுகின்றார் என்று தெரிய வந்துள்ளது.

Previous Post Next Post