மகாலட்சுமியின் கள்ளக் காதலால் தனியார் தொலைக்காட்சிக்கு வந்த வினை!

சினிமாத் துறையில் சர்ச்சைகளுக்குப் பஞ்சமிருக்காது. இத் துறையில் இருப்பவர்கள் வதந்திகளுக்கும், கள்ளத் தொடர்புகளுக்கும் இடையில் சிக்கி தவிர்ப்பார்கள்.

அந்தவகையில்தான், வெள்ளித் திரையைத் தூக்கிவாரிப் போட்ட செய்தி ஈஸ்வர்-மகாலட்சுமி கள்ளக்காதல்.

கடந்த ஒரு மாத காலமாக நடிகர் ஈஸ்வரின் மனைவி பொலிஸாரிடம் தன் கணவர் ஈஸ்வருக்கும் நடிகை மகாலட்சுமிக்கும் இடையில் கள்ளக் காதல் இருப்பதாகவும் பணம் கேட்டு மிரட்டி அடிப்பதாகவும் முறைப்பாடு செய்தார்.

இச் சம்பவத்தால் ஈஸ்வர் மற்றும் அவரது மனைவி ஜெயஸ்ரீ, நடிகை மகாலட்சுமி ஆகியோர் மாறி, மாறி பத்திரிகையாளர்களைச் சந்தித்துத் தங்களுக்கு நடந்ததையும் நியாயத்தையும் கூறி வருகின்றனர்.

இந் நிலையில் இக் குழப்பத்திற்குக் காரணமாக இருப்பது ஈஸ்வரும், நடிகை மகாலட்சுமியும் நடித்து வரும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தேவதையைக் கண்டேன் என்ற நாடகம் தான்.

இதனால் தங்கள் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு இவ்விருவரின் பிரச்சினையால் ரசிகர்களிடையே எதிர்மறையான கருத்துக்கள் எழுந்துள்ளதால் தேவதையைக் கண்டேன் நாடகத்திற்கு புற்றுபுள்ளி வைக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவ்விருவரும் படப்பிடிப்புக்கு வரும் போது சில சலசலப்பு சூழல் நிலவுவதால்தான் இத் தொடரை முடித்துக் கொள்வதாக அத் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Previous Post Next Post