யாழில் இருவர் மீது வாள்வெட்டு! மோட்டார் சைக்கிள்களை கைவிட்டு தப்பியோட்டம்!! (படங்கள்)

தைப்பொங்கல் நாளனான நேற்று யாழ்ப்பாணம் கொட்டடிப் பகுதியில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலையடுத்து ஊரவர்கள் துரத்திச் சென்றபோது 3 மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் கொட்டடி வைரவர் கோவிலடிப் பகுதியில் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

படுகாயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

3 மோட்டார் சைக்கிள்களில் வந்த ஏழுக்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று இத் தாக்குதலை நடத்தியுள்ளது. அவர்கள் பொம்மைவெளியைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவதாக கொட்டடி இளைஞர்கள் தெரிவித்தனர்.

குறித்த கும்பல் கைவிட்டுச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களும் கொட்டடியைச் சேர்ந்தவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளன.

Previous Post Next Post