யாழில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு! ஆளுநரின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!!

வடக்கு மாகாணத்தில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இது தொடர்பில் வடக்கு மபகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மாகாணத்தில் உள்ள வாகன சாரதிகள் இன்று காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

மக்கள் வீண் வதந்திகளைக் கேள்வியுற்று தமது நேரத்தை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வீணடித்து வருகின்றனர்.

எரிபொருளுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது என்ற செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை. போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது.

மக்கள் வீண் குழப்பமடைய வேண்டாம் என்று வடக்கு மாகாண ஆளுநர் கேட்டுள்ளார் என்றுள்ளது.

Previous Post Next Post