இராணுவ முகாமுக்குள் வெடி கொளுத்திப் போட்ட இரு இளைஞர்கள் உயிரிழப்பு!

புத்தாண்டு தினத்தன்று கிளிநொச்சி-கனகபுரம் பகுதியில் லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்திருந்தனர்.

நேற்று அதிகாலை இடம்பெற்ற குறித்த விபத்தில் இளைஞர்கள் இருவரும் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

குறித்த இளைஞர்கள் இருவரும் கிளிநொச்சி நகரில் உள்ள இராணுவ முகாம் ஒன்றுக்குள் பட்டாசு கொழுத்தி எறிந்துள்ளனர்.

இந் நிலையில் படையினர் தம்மைப் பிடிக்க வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அதிக வேகமாக தலைக் கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியுள்ளனர் என்று பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனகர்.
இருப்பினும் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் துரத்திச் செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய குறித்த இளைஞர்கள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post