மகளின் தற்கொலையைத் தாங்க முடியாமல் தீக்குளித்த தாயும் உயிரிழப்பு!

காதலனால் ஏமாற்றப்பட்ட கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மகேஸ்வரன் கஜானி (வயது-17) என்ற மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்திருந்தார்.

மகளின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத தாயும் தன்னைத் தானே எரியூட்டி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந் நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த தாயும் இன்று உயிரிழந்தார். இச் சம்பவம் கொக்குவில் அரசடிப் பகுதியில் இடம்பெற்றது.

தொடர்புடைய செய்தி: காதலனால் ஏமாற்றப்பட்ட யாழ். மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

Previous Post Next Post