யாழில் கொரோனா தொற்று? பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!

உலகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கான பெரியளவு நோய்த் தாக்கங்கள் அவருக்கு இல்லை எனவும் அவருடைய குருதி மாதிரியை பரிசோதித்த பின்னரே குறித்த வைரஸ் தொற்று தொடர்பில் அறிவிக்க முடியும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி.ஜமுனாநந்தா தெரிவித்தார்.

அத்துடன் இது தொடர்பில் மக்கள் பீதியடையத் தேவையில்லை. குறித்த சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பில் நாங்கள் அவருக்கு முழுமையான சிகிச்சை அளித்து வருகின்றோம். அப் பெண் தனிமைப்படுத்தப்பட்ட விடுதி ஒன்றில் சிகிச்சைக்காக உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் பணிப்பாளர் தெரிவித்தார்.
Previous Post Next Post