இலங்கையில் கொரோனாத் தொற்று! 166 ஆக உயர்வு!!

உலக நாடுகளில் பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களைப் பலியெடுத்து வரும் கொரானாத் வைரஸ், தற்போது இலங்கையிலும் அதி வேகமாகப் பரவி வருகின்றது.

அந்தவகையில், கோரோனா வைரஸ் தொற்றால் மேலும் நான்கு பேர் இன்று (ஏப்ரல் 4) சனிக்கிழமை இரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால்
பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 166ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது.

அவர்களில் 25 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். 136 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதுடன் அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் அதிதீவிர சிகிச்சைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

நாடுமுழுவதுமுள்ள 22 வைத்தியசாலைகளில் 273 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
Previous Post Next Post