கொரோனாத் தொற்று! ஈழத் தமிழர்கள் இருவர் லண்டனில் உயிரிழப்பு!

உலகெங்கும் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், பல்லாயிரக் கணக்கான மக்களின் உயிர்களைக் காவுகொள்கின்றது.

இந் நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து உலக நாடுகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள் பலர் இவ் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன், வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்தவகையில், லண்டனில் வசிப்பரும் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவருமான குகன் என்பவரும், இன்னொரு தமிழரான லண்டனில் வசிக்கும் குகபிரசாத் என்பவரும் இக் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று உயிரிழந்துள்ளனர். 



Previous Post Next Post