நடந்து சென்றவரை மோதித் தள்ளியது மோட்டார் சைக்கிள்! இளம் குடும்பஸ்தர் பலி!!

கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்திக்கு அண்மையில் நேற்றுமுன்தினம் (29.06.2020) திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.

கிராஞ்சி பூநகரியைச் சேர்ந்தவரும் யூனியன்குளம் கோணாவில் பகுதியில் வசித்தவருமான மூன்று பிள்ளைகளின் தந்தையான வடிவேல் குணேஸ் (வயது 41) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

வீதியில் நடந்து சென்றவரை வேகமாக வந்த மோட்டார் சைக்களில் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post