கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சிறிதரனுக்கு எதிராக முறைப்பாடு!

2004 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 75 கள்ள வாக்குகளை தான் போட்டிருந்ததாக தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இன்று (14) முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் சட்டத்தரணி செலன்ஸ்டின் என்பவரே இம்முறைப்பாட்டை செய்துள்ளார். ஏற்கனவே தேர்தல் திணைக்கள யாழ்.அலுவலகத்தில் இத்தகைய முறைப்பாட்டை செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சிறீதரனிற்கு எதிராக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Previous Post Next Post