யாழில் இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற வேட்பாளர்?

யாழ்ப்பாணம் தென்மராட்சியில் இலங்கையின் பிரபல கட்சி ஒன்றின் யாழ். மாவட்ட வேட்பாளர் ஒருவர் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றதாக இளம் பெண் ஒருவரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று குறித்த கட்சியின் சாவகச்சேரியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இருந்து இளம் பெண் ஒருவர் கூச்சல் இட்டவாறு வெளியே ஓடிவந்திருக்கின்றார்.

அவரை சூழ்ந்த மக்களும் அந்தப் பகுதியில் இருந்த இராணுவத்தினரும் சம்பவம் தொடர்பில் கேட்டபோது, குறித்த கட்சியின் வேட்பாளர் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றதாக குறித்த பெண் தெரிவித்திருக்கின்றார்.

வேலைக்கு ஆட்கள் தேவை என்று விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய தனது தாயார் இன்றைய நாளே தன்னை அங்கு கொண்டுவந்து விட்டதாகவும் குறித்த பெண் கண்ணீர் மல்ல தெரிவித்திருக்கின்றார்.

சம்பவத்தினை அடுத்து அவர் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டிருக்கின்றார்.
Previous Post Next Post