எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தொண்டமனாறைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உருத்திரன் திருவருட்செல்வன் (வயது -50) என்பவரே உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
துவிச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தலைவர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. படுகாயமடைந்த அவரை மந்திகை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது வழியில் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரும் காயமடைந்த நிலையில் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.