இலங்கையில் 17ஆவது கோவிட் -19 நோயாளி உயிரிழப்பு



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கோவிட் -19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஜா-எலையைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்மூலம் நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் 17ஆவது நபர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்தவரே இன்று உயிரிழந்தார். அவருக்கு கோரோனா தோற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கல்லீரல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்த முன்றாவது நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நாட்டில் 8 ஆயிரத்து 413 பேர் கோரோனா தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 ஆயிரத்து 933 பேர் சுகமடைந்துள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
Previous Post Next Post