எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இது குறித்து மேலும் தெரியவருவதாவது.
குறித்த மாணவன் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா குருமன்காட்டில் உள்ள தன்னுடைய நண்பனின் வீட்டில் தங்கியிருந்துவிட்டு சனிக்கிழமை (நேற்று) மாலை புறப்பட்டு கொழும்பு சென்றிருக்கின்றார்.
இன்று கொழும்பு டேர்டன்ஸ் தனியார் மருத்துவமனையில் அவருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவனிடம் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின் பிரகாரம் 5 நண்பர்களுடன் நெருங்கி பழகியதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இணையவழிமூலம் மாத்தி்ரமே கலந்துகொண்டுள்ளார்.
இதேவேளை அவருடன் பழகிய குறித்த 5 பேர் தொடர்பாக சுகாதர பிரிவினர் கவனம் செலுத்திவருவதுடன், மாணவனை கொரோனா வைத்தியசாலைக்கு மாற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அவர் வவுனியாவில் தங்கியிருந்த குருமன்காடு உட்பட்ட பகுதிகள் தொடர்பாகவும் சுகாதாரபிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.