ஆயுள் தண்டனை கைதியான தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மாளிகவத்தை போதிராஜராம விகாரையின் முன்னாள் தலைமை பதவி வகித்த ஊவ தென்னே சுமண தேரர் ஆயுள் தண்டை விதிக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

2010 ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில், ஜனவரி 02ஆம் திகதி, பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றிற்கு அமைய, குறித்த விகாரையை சுற்றி வளைத்த பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை கைப்பற்றியிருந்தனர்.

ரி56 துப்பாக்கிகள் இரண்டு, 50 கைக்குண்டுகள், 210 துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விகாரைக்குள் மறைத்து வைத்திருந்த குற்றம் நிரூபணமானதை அடுத்து, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் முதலாம் திகதி கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேயினால் இந்த தண்டனக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில், ஊவ தென்னே தேரருடன், குற்றம்சாட்டப்பட்ட, அவ்விகாரையைச் சேர்ந்த மாவெல சுபோத தேரர், முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படும் பீ. ராஜபாலன், கே. தமிழ்செல்வம், சந்தானம் சுப்ரமணியம் ஆகியோர், வழக்கு விசாரணைகளின் இடையில் குற்றச்சாட்டுகளிலிருந்து நிரபராதிகள் என நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post