7 நாளில் தண்டனை: யாழில் புலிகளின் பெயரில் எச்சரிக்கை சுவரொட்டி!

யாழ்ப்பாணம், மணியந்தோட்டம் பகுதியில் இன்று புலிகளின் பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டியினால் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலைப் புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்டு, கலாச்சார சீரிழிவு உள்ளிட்ட சில விடயங்களில் ஈடுபடுபவர்களிற்கு தண்டனை நிறைவேற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஒரேயொரு சுவரொட்டி மட்டும் ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த சுவரொட்டியை யார் ஒட்டியது என்பது குறித்து பொலிசார், இராணுவ புலனாய்வாளர்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post