யாழில் கொரோனாத் தொற்று! 33 வயதுடைய ஒருவர் உட்பட மேலும் இருவர் உயிரிழப்பு!!


யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சுழிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஆண் ஒருவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு உயிரிழந்துள்ளார்.

அத்துடன் இன்றிரவு 8 மணிக்கு சுழிபுரத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இருவரும் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
Previous Post Next Post