கோவிட்-19 தொற்று நீங்க யாழ்.ஆலயத்தில் சிறப்பு வழிபாடு! ஞானசார தேரரும் பங்கேற்பு!! (படங்கள்)

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று நிலமை நீங்க வேண்டி யாழ்ப்பாணத்தில் சிறப்பு யாகம் இன்று இடம்பெற்றது.

இலங்கையில் உள்ள நான்கு விஷ்ணு ஆலயங்களில் இவ்வாறான வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திலும் இந்த வழிபாடு இடம்பெற்றது.

கோவிட்-19 வைரஸ் பெருந்தொற்றில் இருந்து விடுபடுவதற்கு பொன்னாலை வரதராஜாப் பெருமான் ஆலயத்தில் இன்று சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு வழிபாடுகள் இடமம்பெற்றன.

பொன்னாலை வரதராஜப் பெருமான் ஆலய முதன்மைக் குரு சோமஸ்கந்த குருக்கள் மற்றும் நயினை நாகதீபம் விகாராதிபதி மீககா வதுலே சிறீ விமல ஆகியோர் ஏற்பாடு செய்த இந்த வழிபாட்டில் கலகொட அத்தே ஞானசார தேரர் கலந்துகொண்டார்.



Previous Post Next Post