யாழில் வழிப்பறிக் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது!

வடமராட்சிப் பகுதியில் வீடுடைத்துத் திருட்டு மற்றும் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பருத்தித்துறைப் பொலிஸ் புலனாய்வாளர்கள் முன்னெடுத்த விசாரணைகளின் போது, நேற்று அல்வாய்ப் பகுதியில் வைத்து 23 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடமிருந்து 3 பவுண் தாலி, 2 பவுண் சங்கிலி, மோட்டார் சைக்கிள் மற்றும் ஐ போன் என்பவற்றுடன் 3 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தக் கும்பலைச் சேர்ந்த மற்றையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post