மணல் அகழ்வில் ஏற்பட்ட முரண்பாடு வாள்வெட்டில் முடிந்தது! ஒருவர் பலி!! மூவர் காயம்!!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
“கிளிநொச்சியில் மணல் அகழ்வில் ஏற்பட்ட முறுகல் நிலை வாள்வெட்டில் முடிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் வெட்டுக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்” என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மேலும் இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் உமையாள்புரத்தில் இடம்பெற்றது.

சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக இரண்டு தரப்புகள் இடையே மோதல் இடம்பெற்றுள்ளது. அதில் மற்றைய தரப்பைச் சேர்ந்த நால்வர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Previous Post Next Post