“பசிக்கிறது சாப்பாடு தாருங்கள்” எனக் கேட்டு சாப்பிட்டு விட்டுப் பெண்ணைக் கொலை செய்த தந்தையும் மகளும்!! (படங்கள்)

தயாவதி செல்வராஜா
வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையிட்டு தப்பிச்சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பார் வீதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று (டிசெ.20) பிற்பகல் இந்தக் கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டுக்கு வழமையாக வேலைக்கு செல்லும் தகப்பனும் மகளுமே இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது.

சந்தேக நபர்கள் இருவரும் எங்களுக்கு பசிக்கிறது சாப்பாடு தாருங்கள் என்று கூறி கொலை செய்யப்பட்ட பெண்ணிடம் சாப்பாடு வாங்கி உண்ட பின்னரே இச் செயலை செய்துள்ளனர்.

இதன் போது உணவு உண்டுகொண்டிருக்கும்போது திடீரென வீட்டின் உரிமையாளரான பெண் மீது கத்தியால் சரமாரியாக வெட்டியதுடன் கழுத்தை வெட்டிய பின் தாலிக்கொடியை அறுத்தெடுத்துள்ளதுடன் காதுகளில் உள்ளவற்றை அகற்ற முடியாமல் அதனை வெட்டி கொள்ளையர்கள் எடுத்துள்ளனர்.

குடும்பப் பெண்ணை கொலை செய்த இருவரும் அங்கிருந்த தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நிலையில் வீதியில் நின்றவர்கள் அவர்களின் உடைகளில் இரத்தக்கறை உள்ளதை கண்டு சந்தேகம் கொண்டு துரத்திச்சென்று இருவரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தயாவதி செல்வராஜா (வயது-50) என்ற பெண்ணே கொலை செய்யப்பட்டார்.

சம்பவ இடத்தில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார், புலனாய்வுத்துறையினர் மற்றும் தடயவியல் பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


Previous Post Next Post