யாழில் தனிப்பட்ட முரண்பாடு வாள்வெட்டில் முடிந்தது! மூவர் வைத்தியசாலையில்!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 3 பேர் படுகாயமடைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுழிபுரம் மேற்கு பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்தது. தனிப்பட்ட முரண்பாடே  இவ் வாள்வெட்டுச் சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 பேரை பொலிசார் கைது கெய்துள்ளனர்.
Previous Post Next Post