யாழில் 23 வயது இளம் குடும்பஸ்தரின் சட*லம் மீட்பு!

யாழ்ப்பாணம் – வடமராட்சி வடக்கு – பருத்தித்துறை கடலில் தொழிலுக்கு சென்ற இளம் மீனவர் சட*லமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடலுக்குச் சென்ற குறித்த தொழிலாளியின் படகின் இயந்திரத்தில் தூண்டில் கயிறு சிக்கியுள்ளது. அதனை சீர்செய்ய முற்பட்ட போது கடலில் வீழ்ந்து கா*ணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

பின்னர் அவருடன் சென்ற சக தொழிலாளி தகவல் வழங்கியதைத் தொடர்ந்து பருத்தித்துறை கொட்டடிப் பகுதி மீனவர்கள் சுமார் 25 க்கு மேற்பட்ட படகுகளில் தேடுதல் நடாத்தி சட*லத்தை கண்டுபிடித்து இன்று காலை 10 மணியளவில் கரை சேர்ந்துள்ளனர்.

சட*லமாக மீட்கப்பட்ட தொழிலாளி பருத்தித்துறை கொட்டடியைச் சேர்ந்த 23 வயதுடைய விஜயகுமார் நிக்சன் என்ற ஒரு குழந்தையின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் விசா*ரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post