
ரகு துஷ்யந்தன் (வயது 39) என்பவரே இவ்வாறு உயி*ரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் கடந்த 22.06.2026 அன்று ஒரு கத்*தி வெ*ட்டு தாக்*குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வயிற்றில் படு*காயமடைந்த நபர் சிகி*ச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்குச் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (27-06-2026) உயி*ரிழந்துள்ளார்.
குறித்த தாக்*குதலை மேற்கொண்ட நபரை முன்னதாக வட்டுக்கோட்டைக் பொலிஸார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்திய வேளை அவரை எதிர்வரும் 07.07.2026 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.