
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வீட்டில் உள்ளவர்கள் நேற்று முற்பகல் வெளியில் சென்று மாலை 6 மணிக்கு வீடு திரும்பிய போது, பின் வாசல் கதவு உடைத்துக் காணப்பட்டுள்ளது. அதுதொடர்பில் ஆராய்ந்த போது, வீட்டின் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 பவுண் தங்க நகைகள் திருட்டுப் போயிருந்துள்ளன.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது. அதுதொடர்பில் இன்று மாலை தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் சம்பவ இடத்தில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.