ஆர்ஜண்டினாவின் வெற்றியில் சந்தேகம்! கிண்ணத்தைத் திரும்பப் பெறக் கோரிக்கை!! (படங்கள்)

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆர்ஜண்டினா அணி வெற்றி பெற்றதில் சந்தேகம் உள்ளதாகவும், வெற்றிக் கோப்பையை திரும்பப் பெற வேண்டும் எனவும் பிரெஞ்சு ஊடகம் ஒன்று முன்வைத்த கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்ஜண்டினா அணிக்கான மூன்றாவது கோலினை 108 ஆவது நிமிடத்தில் லியோனல் மெஸ்ஸி அடித்திருந்தார். இந்த கோல் அடிக்கப்படும் முன்பு மேலதிக வீரர்கள் இருவர் மைதானத்துக்குள் இருந்ததாக ஆதாரங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.

உதைப்பந்தாட்ட விதிகளின் படி, கோல் ஒன்று அடிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் போட்டிகள் ஆரம்பிக்கப்படும் போது மேலதிக வீரர் மைதானத்துக்குள் இருப்பதை நடுவர் சரிபார்க்க வேண்டும். அதுவரை அவர்கள் மைதான கோட்டுக்கு வெளியே காத்திருக்க வேண்டும். ஆனால் லியோனல் மெஸ்ஸியினால் கோல் அடிக்கப்படுவதற்கு முன்னரே மேலதிக வீரர்கள் இருவர் மைதானத்துக்குள் நுழைந்துள்ளனர்.

மேலதிக வீரர்கள் உள்ளே இருப்பதை VAR என அழைக்கப்படும் வீடியோ துணை நடுவர் (video assistant referee) சரி பார்த்திருக்க வேண்டும்.

கோல் போடப்படுவதற்கு முன்னர் மேலதிக வீரர் மைதானத்துக்குள் நுழைந்தால், அந்த கோல் செல்லுபடியற்றதாகும்.

மெஸ்ஸி 108 ஆவது நிமிடத்தில் அடித்த கோல் நிராகரிக்கப்பட்டிருந்தால் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றிருக்கும்.

இத் தகவல்களை புகைப்பட ஆதாரங்களுடன் பிரெஞ்சு ஊடகமான L'Equipe வெளியிட்டுள்ளது. குறித்த கோல் வழங்கப்பட்டிருக்கக் கூடாது எனவும், ஆஜெண்டினாவின் வெற்றி ஏற்கத்தக்கது இல்லை எனவும், வெற்றிக்  கிண்ணத்தை திருப்பி வழங்க வேண்டும் எனவும் L'Equipe தெரிவித்துள்ளது.

மேற்படி செய்தி சர்வதேச ஊடகங்களினால் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக, 23 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்ட பெனால்டி தொடர்பான சர்ச்சைகளும் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக பிரெஞ்சு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை கீழுள்ள இணைப்புகளில் காணலாம்.

Previous Post Next Post