வீதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடிப்பு! 7 உயிரிழப்பு!! (படங்கள்)

வீதியின் அருகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இச் சம்பவம் துருக்கில் இடம்பெற்றுள்ளது. ஈராக்கின் வடக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் குர்திஸ்தான் பயங்கரவாதிகள் இக் குண்டை வெடிக்க வைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

இக் குண்டுவெடிப்பில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இத் தாக்குதல் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post