கிளிநொச்சியில் பரிதாபமாக உயிரிழந்த 11 வயதுச் சிறுமி! (படங்கள்)

கிளிநொச்சியில் பதினொரு வயது மாணவி ஒருவர் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளமை அப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்திலேயே நேற்றுப் பிற்பகல் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளிக் கொண்டிருந்தபோது சிறுமி தவறி வீழ்ந்து மரணித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அன்னைசாரதா வித்தியாலயத்தில் கல்வி கற்ற புவனேஸ்வரன் டிலானி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிந்தவராவார்.

டிலானி குடும்பத்தின் மூத்த பிள்ளை என்பதுடன், மாணவியின் தந்தை நிரந்தர சுகவீனம் காரணமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதவர் என்றும் தாயின் உழைப்பிலேயே அவர்களின் குடும்பம் தங்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.



Previous Post Next Post