யாழ்.மிருசுவிலில் படுகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு! (படங்கள்)

படுகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் துர்க்கை அம்மன் ஆலயத்திற்குச் செல்லும் வீதியில் சடலம் காணப்படுவதை அவதானித்த பொதுமக்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த சடலத்தின் தலை மற்றும் உடலில் காயங்கள் உள்ள நிலையில் கொலையாக இருக்கலாம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post