கற்பழிக்க முயற்சி! மிருசுவிலில் ஆண் அடித்துக் கொலை!! பெண் கைது!!!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டிருந்தது. அவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் தன்னை வன்புணர்வதற்கு வந்ததாகவும் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே அவரைத் தாக்கியதாகவும் அந்தப் பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் பணிபுரிபவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிருசுவிலில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் கோவில்களில் தொண்டு செய்து கொண்டு தனிமையில் வசித்து வந்த நபர் ஒருவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

ரத்தினம் குகேந்திரன் (வயது-56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார். கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்காக காயங்களுடன் அவரது சடலம் மீட்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோப் நாயின் உதவியுடன் எழுதுமட்டுவாழ் பகுதியில் உள்ள வீடொன்றைக் கண்டிறிந்தனர். அந்த வீட்டில் வசித்த பெண் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

“நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்கு வந்த அவர் என்னை வன்புணர்வதற்கு முயற்சித்தார். அதனால் என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவரை இரும்புக் கம்பிகளால் தாக்கினேன். அவர் உயிரிழந்து விட்டார். அதன் பின்னர் அவரது சடலத்தை எடுத்துச் சென்று வீதியில் போட்டேன்” என்று அந்தப் பெண் வாக்குமூலம் வழங்கினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நபரைத் தாக்கிய கம்பியை தண்ணீரால் கழுவி வைத்ததுடன், வீட்டையும் கழுவி சந்தேகநபர் சுத்தப்படுத்தியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post