யாழில் இராணுவச் சிப்பாய் மீது தாக்குதல்! சுற்றிவளைக்கப்பட்ட கிராமம்!!

பெங்கல் தினமான நேற்றைய தினம் இராணுவச் சிப்பாய் மீது பொதுமகன் ஒருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் இராணுவச் சிப்பாயைக் கைது செய்யும் நோக்குடன் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் இந்த சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வீதியைக் கடக்க முற்பட்ட சிறுமி ஒருவரை மோதி விபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை வேகமாகச் செலுத்தி வந்தார் என இராணுவத்தினர் அந்த நபரைக் கண்டித்தனர்.

அதன்போது அந்த நபரின் உறவினர்கள் கூடியதால் துணிவடைந்த அவர் இராணுவச் சிப்பாயைத் தாக்கியுள்ளார். சிப்பாயைத் தாக்கிவிட்டு அனைவரும் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந் நிலையில் நாகர்கோவில் பகுதி இன்று அதிகாலை 3 மணி தொடக்கம் சுற்றவளைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் பகுதியிலிருந்து எவரும் வெளியில் செல்லவோ, வெளியிலிருந்து எவரும் உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை.

சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார் இராணுவச் சிப்பாயைத் தாக்கியவரை இதுவரை கைது செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post