யாழில் 1729 பேர் தனிமைப்படுத்தலில்! முடக்கப்பட்டது தாவடிக் கிராமம்!! - யாழ்.அரச அதிபா்

யாழ்.மாவட்டத்தில் ஆயிரத்து 729 பேர் தனிமைப்படுத்தப்பட்டுக் காண்காணிக்கப்படுகின்றனர் என்றும் யாழ்.மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் தற்போது கொரோனா நிலமை தொடா்பாக ஊடகங்களுக்கு இன்று மாலை கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவா் தெரிவித்ததாவது;

192 நபா்கள் அாியாலை தேவாலயத்தில் நடந்த ஆராதனையில் கலந்து கொண்டிருக்கின்றனா். 80 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டு கடுமையாக கண்காணிக்கப்படுகின்றனர்.

கொக்குவில் தாவடி கிராமத்தில் சுமாா் 300 குடும்பங்களை உள்ளடக்கியதான ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. எனவே மக்கள் விழிப்புணா்வு ஆலோசனைகளை பின்பற்றி மிக அவதானமாக நடந்து கொள்ளுமாறு நாங்கள் கோாிக்கை விடுக்கிறோம்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒருவா் கொரோனாத் தொற்றுடன் இனங்காணப்பட்டிருக்கின்றாா். இதனடிப்படையில் ஆயிரத்து 729 போ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அாியாலை பகுதியில் மட்டும் 192 பேர் 80 வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

அதேபோல் கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டிருக்கும் கொக்குவில் – தாவடி கிராமத்தின் ஒரு பகுதி முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது.

மேலும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருகிறது. மக்கள் விழிப்புணா்வுடன் செயற்படுவதால் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை தடுக்கலாம்.

அதேபோல் ஊரடங்கு மேலும் 2 அல்லது 3 வாரங்களுக்கு நீடிக்கப்படலாம். எனவே மக்கள் அவதானமாக இருக்கவேண்டும். தமக்கு தேவையான உதவிகளை மக்கள் தமது பிரதேச செயலா் ஊடாக தொடா்பு கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

வெதுப்பக பொருள்களை விநியோகம் செய்ய இன்று காலை நடவடிக்கை எடுத்தோம். அதனை மாலையிலும் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமது முயற்சி வெற்றியளித்துள்ளது.

மேலும் மருந்துகளையும் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவு பொருள்களையும் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதேபோல் பிரதேச செயலா்கள் ஊடாக 64 ஆயிரம் குடும்பங்களை இனங்கண்டிருக்கிறோம். அவா்களுக்கு உலா் உணவு விநியோகிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.

மேலும் இடர் முகாமைத்துவ பிாிவு ஊடாக ஒரு மில்லியன் ரூபாய் நிதியை வழங்க அந்த அமைச்சு இணங்கியுள்ளது. மேலும் பிரதமா் ஊடாக மாவட்டத்திற்கு ஒரு மில்லியன் ரூபாய் வழங்கவும் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது.

எனவே மக்களுக்கான உதவிகள் கிடைக்கும், மக்கள் விழிப்பாக இருப்பதுடன், நோய் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் – என்றாா்.
Previous Post Next Post