யாழில் காதல் திருமணத்தால் நடந்த விபரீதம்! பெண் வீட்டார் மீது வாள்வெட்டு தாக்குதல்!!

யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள் அங்கு அடாவடியில் ஈடுபட்டடிருந்தனர்.

மல்லாகம் வங்களாவடி என்ற பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இதேவேளை வாள்வெட்டுக் குழுக்களின் இந்த அடாவடி சம்பவத்துக்கு காதல் பிரச்சினைதான் காரணம் என தெரியவந்துள்ளது.

அண்மையில் இருவர் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும் பெண் வீட்டார் பெண்ணைப் பிரித்ததாகவும் தெரிய வருகின்றது.

இதனையடுத்தே ஆணின் நெருங்கியவர்கள் என்று கருதப்படுபவர்கள் இத் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous Post Next Post