ஆலய வழிபாடுகள், தனியார் வகுப்புக்கள் மீள ஆரம்பிக்க அனுமதி!

சுகாதார வழிமுறைகளுக்கு மத வழிபாடுகள் மற்றும் தனியார் வகுப்புகளை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க இதனை, தெரிவித்துள்ளார்.

அதற்கமைய ஜூன் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் மத வழிப்பாட்டு தலங்களில் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 50 பேருக்கு மாத்திரமே வழிபாடுகளில் ஈடுபட முடியுமென அவர் கூறியுள்ளார்.

அத்துடன் சுகாதார நடவடிக்கைகளுக்கு அமைவாக தனியார் வகுப்புக்களில் 100 மாணவர்களை மாத்திரம் உள்வாங்கி கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் 15ஆம் திகதி முதல் குறித்த கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post