யாழ்.உரும்பிராயில் விபத்து! மயங்கிய நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!! (படங்கள்)

யாழ்.உரும்பிராய் இந்துக்கல்லுாரிக்கு அருகில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

புன்னாலைகட்டுவன் நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து அதே திசையில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியை பின்புறத்தால் மோதி தள்ளியுள்ளது.

இந்நிலையில் முச்சக்கர வண்டியிலிருந்து துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து சுயநினைவை இழந்த நிலையில் சாரதி பொதுமக்களால் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Previous Post Next Post