பிரான்ஸில் இலங்கைப் பெண்ணுக்குக் கத்திக் குத்து! தாயின் கள்ளக் காதலன் கைது!!

19 வயதுடைய இளம் பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிருக்கு போராடி வருகின்றார். செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் பிரான்ஸில் Vaires-sur-Marne (Seine-et-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது.

இரவு 9 மணிக்கு அப்பிராந்திய காவல்துறையினர் அழைக்கப்பட்டதை அடுத்து, rue des Pêcheurs வீதியில் உள்ள சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்றனர். அவ்வீட்டின் படுக்கை அறை ஒன்றில் 19 வயதுடைய இளம் பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.


உடனடியாக உதவிக்குழு அழைக்கப்பட்டது. உலங்குவானூர்தியில் வந்த மீட்புக்குழு குறித்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குறித்த இளம் பெண்ணின் உடலில் 15 வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும், சமையலறை கத்தி மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது.

அதேவேளை, தாக்குதலுக்கு இலக்கானவரின் தாயாரின் 32 வயதுடைய காதலன் இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளார் எனவும், 13 செ.மீ நீளம் கொண்ட கத்தியால் அப்பெண்ணை தாக்கியுள்ளார் எனவும் அறிய முடிகிறது.


தாக்குதலுக்கு இலக்கான பெண் இலங்கையைச் சேந்தவர் எனவும், அவருடன் அவரது சகோதரி மற்றும் தாயார் என சிலர் அங்கு வசித்த போதும், எவரும் சம்பவத்தை நேரில் பார்க்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post