யாழ்.தெல்லிப்பளை வைத்தியசாலையில் வரலாற்றில் நடந்த முதல் அதிசயம்! (படங்கள்)

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இன்றைய தினம் ஒரே சூழில் உருவான மூன்று குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

சாவகச்சேரி பகுதியினை சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்கபெற்றுள்ளது. இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இவ்வாறு ஒரே சூழில் கிடைக்கப்பெற்றுள்ளது.

குறிப்பாக மூன்று அல்லது நான்கு குழந்தைகள் பெறுவதற்கு தயாராகும் தாய்மார்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு வைத்திய நிபுணர்களின் உதவியுடன் குழந்தைகள் பிரசவிக்கப்பட்டு வருகின்றமை வழமை.

இந்த நிலையில் பெண்ணியல் வைத்திய நிபுணர் சரவணபவன் மற்றும் குழந்தை வைத்திய நிபுணர் ஜெயபாலன் ஆகியோரின் பங்களிப்புடன் சத்திரசிகிச்சை இன்று காலை மேற்கொள்ளப்பட்டு குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.

தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக குறிப்பிடும் விடுதி வைத்தியர், அவர்கள் வெகுவிரைவில் வீடு திரும்புவர்கள் என தெரிவித்தார்.





Previous Post Next Post