எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (டிசெ. 23) புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் அவர்களுக்கு தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 13 ஆவது நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 103 ஆக உயர்வடைந்துள்ளது.
மருதனார்மடம் சந்தை தொற்றாளருடன் நேரடித் தொடர்புடைய உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஒருவருக்கும் தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மல்லாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறுவிளானைச் சேர்ந்த ஒருவரும் காங்கசேன்துறையைச் சேர்ந்த இருவரும் உள்ளடங்குகின்றனர்.
வடக்கு மாகாணத்தில் ஏற்பட்ட முதலாவது கோவிட் -19 தொற்று நோய்க் கொத்தணி இதுவாகும்.