யாழ். மக்களின் பொறுப்பற்ற செயலால் குடாநாட்டை மூழ்கடித்த மழை வெள்ளம்! (வீடியோ)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் மாநகரில் கழிவுநீர் வாய்க்கால்கள் சுகாதாரத் தொழிலாளிகளால் கழிவுப் பொருள்கள் அகற்றப்பட்டுகின்றன.

யாழ்ப்பாணம் மாநகரின் போதனா வைத்தியசாலை வீதியில் இந்த நடவடிக்கை இன்று (டிசெ.20) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் முன்னெடுக்கப்பட்டது.

கழிவுநீர் வாய்க்காலுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கிக் கிடப்பதனால் நீர் வழிந்தோடு செயற்பாடு பாதிக்கப்பட்டது. அதனால் வெள்ள நீர் வழிந்தோடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளிகளினால் கழிவுநீர் வாய்க்கால்கள் துப்புரவு செய்யும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. 

அண்மையில் பெய்த கடும் மழை யாழ்.குடாநாட்டை வெள்ளத்தில் மூழ்கடித்திருந்தது. அத்துடன் மக்களின் குடிமனைகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்து பல சேதங்களை ஏற்படுத்தியிருந்தது.

இதனால் மக்கள் இடம்பெயர்ந்து பாரிய இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டிருந்தனர்.

இந் நிலைமைக்கு யார் காரணம்? வெறுமனமே அரச தரப்பையோ அல்லது உள்ளுராட்சி மன்றங்களையோ குற்றஞ்சாட்டி விட்டு இருப்பது ஆரோக்கியமானதா?

மக்களும் தங்களின் பொறுப்பு நிலை அறிந்து செயற்படுவது எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை வராது தடுப்பதற்கு வழி ஏற்படுத்தும் என்பது நிறுத்திட்டமான உண்மை.

அதாவது, யாழ்.நகரில் மின்சார நிலைய வீதி, ஸ்ரான்ஸி வீதி, யாழ்.பஸ் நிலையப் பகுதிகளுக்குள் மழை வெள்ளம் வரக் காரணமான, நவீன சந்தைக்குக் கீழாக உள்ள கால்வாயில் வெற்றுப் போத்தல்கள், பிளாஸ்ரிக் கழிவுப் பொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் யார்? இந் நிலைமை யாரால் உருவாக்கப்பட்டது? எனவே இனிவரும் காலங்களிலாவது சமூகப் பொறுப்பாக நடந்து கொள்வதுடன், கழிவுப் பொருட்களை உரிய முறையில் அகற்றுவதற்கு மக்களும் முயற்சிக்க வேண்டும். அதுவே எதிர்காலத்திற்கு ஆரோக்கியமாக அமையும்.

Previous Post Next Post