யாழில் எரிவாயு சிலிண்டருடன் வரிசையில் காத்திருந்த மக்கள்! (படங்கள்)

யாழ்ப்பாணம் - கே.கே.எஸ் வீதி மனோகரா தியேட்டர் பகுதியில் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள் முண்டியடித்துக் கொண்டு வீதியில் நீண்ட வரிசையில் நிற்பதைக் காணக்கூடிதாக உள்ளது.

எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நோக்கில் யாழ். வந்த வாகனத்தைக் கண்ட பொதுமக்கள் அதனைக் கொள்வனவு செய்தற்காக தங்களின் வெற்றுச் சிலுண்டர்களுடன் நீ்ண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

தற்போது நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதுடன் அண்மையில் தொடர்ந்தும் எரிவாயுவின் விலையும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றையதினம் யாழிலுள்ள கடைகளில் எரிவாயுக்கள் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் மக்கள் எரிவாயுவினை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் நிற்பதைக் காணக்கூடிதாக உள்ளது.

Previous Post Next Post