திருமணம் செய்யுமாறு காதலி வற்புறுத்தல்! யாழ்.இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் காதலியின் நச்சரிப்பை தாங்க முடியாமல் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. நாவாந்துறை, கொட்டடி பகுதியை சேர்ந்த 27 வயதான இளைஞனே நேற்று உயிரை மாய்த்துள்ளார்.

திருமணம் செய்து கொள்ளுமாறு காதலி கொடுத்த நச்சரிப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் சில காலத்தின் முன்னர் வவுனியா விடுதியில் பணிபுரிந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரிந்த யுவதியுடன் காதல் வசப்பட்டார். கொரோனா தொற்றையடுத்து இளைஞன் யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.

தொலைபேசியில் தினமும், திருமணம் செய்துமாறு காதலி கொடுத்த நச்சரிப்பை அடுத்தே அவர் உயிரை மாய்த்துள்ளார்.
Previous Post Next Post