காணாமல் போன பெண் குளத்திற்குள் இருந்து சடலமாக மீட்பு! (படங்கள்)

வீட்டில் இருந்து நான்கு தினங்களுக்கு முன் காணாமல் போன பெண் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் எஸ்.விஜயலக்சுமி (வயது-56) என்பவரே இவ்வாறு வவுனியா பேயாடிகூழாங் குளத்திற்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

அப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் குளத்தில் சடலம் மிதப்பதை அவதானித்து பொலிஸார் தகவல்கள் வழங்கியுள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸாரும் இராணுவத்தினரும் சடத்தை மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் நான்கு நாட்களுக்கு முதல் காணாமல் போனவருடையது என அவரின் உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.



Previous Post Next Post