சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கான புதிய கட்டடத் தொகுதி திறப்பு! (படங்கள்)

சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கான புதிய கட்டடத் தொகுதி இன்று வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரியின் பழைய மாணவன் சிற்றம்பலத்தின் “சிற்றம்பலம் நிதியம்” ஊடாக அமைக்கப்பட்ட குறித்த கட்டடத் தொகுதி திறப்பு விழாவுக்கு சிற்றம்பலத்தின் பேரன் சஞ்சீவ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

அதிபர் அருட்தந்தை திருமகன் தலைமையில் இடம்பெற்ற இத் திறப்பு விழாவுக்கு கல்லூரியின் முன்னாள் அதிபரான யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் அருட்கலாநிதி ஜஷ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

இந் நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனல்ட், மருத்துவர் ராஜேந்திரா உள்ளிட்ட கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், அருட்தந்தையர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.









Previous Post Next Post