வடக்கு ஆளுநராக முத்தையா முரளிதரன் நியமிப்பு?

வடக்கு மாகாண ஆளுநராக இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தைய முரளிதரன் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் ஆறு மாகாணங்களின் ஆளுநர்கள் இன்று காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுள்ளனர்.

இதேவேளை வடக்கு மாகாணத்துக்கான ஆளுநராக முத்தையா முரளிதரனை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் மற்றும் வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Previous Post Next Post