ஒரு வயதுப் பெண் குழந்தை கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு! (படங்கள்)

ஒரு வயதான பெண் குழந்தை ஒன்று கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் வவுனியாவில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்மிவைத்தான் கிராமத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணியளவில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை காணாமல் போயுள்ள நிலையில் குழந்தையின் வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தேடியுள்ளனர்.

இந் நிலையிலேயே குழந்தையின் சடலம் அவர்களது வீட்டுக் கிணற்றுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குழந்தையின் வாய் மற்றும் கண் பகுதியில் இரத்தம் வடிந்த நிலையில் காணப்பட்டதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post