இன்று நள்ளிரவுடன் பிரிட்டனில் நடக்கப் போகும் அதிரடி மாற்றங்கள்!

நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட 28 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதிலிருந்து வெளியேற பிரிட்டனைச் சேர்ந்த ஒரு தரப்பினர் விருப்பம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பிரிட்டனில் கடந்த 2016-இல் நடந்த பொது வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் வாக்களித்தனர்.

இதையடுத்து இது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கின. எனினும், பிரெக்ஸிட் சட்டமூலத்தை பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிரதமர்கள் அடுத்தடுத்து பதவி விலகினர். இறுதியாக போரிஸ் ஜோன்சன் பிரதமரானார். அவராலும் இதற்கான சட்டமூலத்தை நிறைவேற்ற முடியவில்லை.

இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் கட்சி வெற்றி பெற்றதையடுத்து, ஜோன்சன் மீண்டும் பிரதமரானார்.

இதையடுத்து, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரெக்ஸிட் சட்டமூலம் கடந்த வாரம் நிறைவேறியது. இதன்மூலம் 3 ஆண்டுகள் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்தது.

தொடர்ந்து பிரிட்டன் வெளியேறுவதை அனுமதிக்கும் சட்டமூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது விவாதம் நடைபெற்றது.

பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரிட்டனின் வெளியேற்றத்துக்கு ஆதரவாக 621 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் பதிவாகின. 13 உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்தனர்.

இதையடுத்து இந்தச் சட்டமூலம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் இன்று நள்ளிரவில் முறைப்படி வெளியேறுகிறது.

வாக்கெடுப்பு முடிவுகள்; வெளியானபோது, பிரிட்டன் உறுப்பினர்கள் சக உறுப்பினர்களை ஆரத் தழுவி பிரியா விடைபெற்றனர்.

அடுத்தகட்டமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 27 உறுப்பு நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்துவது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

 ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதால் அந்நாடு சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 73 பேர் தங்களது பதவியை இழக்கவுள்ளனர்.

இங்கிலாந்து கடவுச் சீட்டின் நிறம் மாற்றப்படும். 30 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த நீல நிறத்துக்கு இங்கிலாந்து கடவுச் சீட்டுக்கள் மாற்றம் பெறும்.

தற்போது புழக்கத்தில் உள்ள யூரோவுக்குப் பதிலாக இனிமேல் பவுண்ட் புழக்கத்துக்கு வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post