
பென்ரைவ் ஒன்றை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டிலேயே குறித்த கிராம அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராம சேவையாளர் ஒருவர் லஞ்சமாக பெற்றமை தொடர்பில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய கிராம சேவையாளரை கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த கிராம அலுவலர் அத்தியடிப் பகுதியில் பல முறைகேடான செயற்பாட்டில் ஈடுபட்டு வந்ததுடன், சேவை பெற வரும் மக்களை இழுத்தடிப்புச் செய்து சேவை வழங்குவதாகவும் அப் பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.