அதிக வேகத்தால் உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! (படங்கள்)

வேகக் கட்டுப்பாட்டையிழந்த மோட்டார் சைக்கிள் சீமெந்து அணைக்கட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு கிளிநொச்சிப் பகுதியில் இடம்பெற்ற இவ் விபத்துச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிருஷ்ணபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த கருப்பையா யோகச்சந்திரன் (வயது-35) என்ற இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Previous Post Next Post